Sunday, December 19, 2010

நன்றியை மறந்த தமன்னா

நன்றிக்கும், சினிமாவுக்கு வெகு தூரம் என்பது பொதுவான கருத்து. இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டைரக்டர் லிங்குசாமிக்கு அப்படியொரு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தமன்னா.

"பையா" படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கியவர் தமன்னா. இப்படத்தை டைரக்டர் லிங்குசாமி இயக்கி இருந்தார். முதலில் இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. படத்தில் அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் வரிசையாக நயன்தாராவின் படங்கள் சரியாக ஓடாததால் சம்பளத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார் லிங்குசாமி. ஆனால் அதை நயன்தாரா ஏற்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இறுதியில் நயன்தாரா நீக்கப்பட்டார். பிறகு தமன்னாவை நடிக்க வைத்தார். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்போது பிரச்சனை என்னவென்றால் லிங்குசாமி தான் அடுத்து இயக்கும் "வேட்டை" படத்தில் தமன்னாவை நடிக்க ‌வைக்க திட்டமிட்டுருந்தார். இதற்காக தமன்னாவிடம் அணுகினார். ஆனால் தமன்னா கேட்ட சம்பளத் தொகையை கேட்டு அதிர்ந்து போனார் லிங்குசாமி. தமன்னா கேட்ட அவ்வளவு பெரிய தொகையை அளிக்க முடியாததால், அமலா பாலை "வேட்டை" படத்தின் நாயகியாக்கியுள்ளார்.

"பையா" படத்தில் தமன்னாவை நடிக்க வைத்ததால், தன்னுடைய "வேட்டை" படத்தில் சம்பளத்தை குறைத்து நடித்து தருவார் என்று எதிர்பார்த்திருந்தார் லிங்குசாமி. ஆனால் அவருக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் தான் மிஞ்சியது.

சினிமாவில் (வாழ்க்கையில்) ஏற்றம் தந்தவர்களை கண்டு கொள்ளாமல் போவது, தமிழ் சினிமாவில் சகஜம்தான் என்பது, தமன்னா விஷயத்தில் உண்மையாகிவிட்டது.

Friday, December 17, 2010

சமிரா ரெட்டி புகைப்படங்கள்


விலைமாதுவாக நடிக்கப்போகிறார் சமீரா

நடிகை சமீரா ரெட்டி புதிய படமொன்றில் விலைமாதுவாக நடிக்கப் போகிறார். வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி ஏராளமான தமிழ் ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த சமீராவை தமிழில் அறிமுகப்படுத்திய டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்போது மீண்டும் ஒரு படத்தில் சமீராவை நாயகியாக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான அசல் படத்தில் சமீராவின் கேரக்டர் பேசும்படி அமையாவிட்டாலும், ரசிகர்கள் சமீராவின் அடுத்த படம் எப்போது? என்று எதிர்பார்த்து வருகிறார்கள். கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படம் மர்மம் கலந்த திகில் படமாம். இப்படத்தில் சமீராதான் நாயகி. விலைமாதுவாக நடிக்கப் போகிறார். நாயகனாக நடிக‌ை மகேஸ்வரியின் சகோதரர் நடிக்கவுள்ளார். பொதுவாக முன்னணி நாயகிகள் எவரும் விலைமாதுவாக நடிக்க தயங்கி வரும் நிலையில் சமீரா அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் கவுதம் கேட்டுக் கொண்டதால் ஓ.கே. சொல்லியிருப்பாரோ என்னவோ?

அஜீத்தின் மங்காத்தாவுக்கு ரெட் சிக்னல்!

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நாயகனாக நடிக்கும் மங்காத்தா படத்திற்கு அதன் தயாரிப்பாளர் ரெட் சிக்னல் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ‌மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறதாம் மங்காத்தா டீம். பாங்காக்கில் சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டு வந்த மங்காத்தா குழுவினர், படத்தின் தயாரிப்பாளரிடம் செலவு கணக்குகளை கொடுத்திருக்கிறார்கள். பில்லை பார்த்த தயாரிப்பு தரப்புக்கு பல்ஸ் ஏறிடவே... நான் சொன்னதுக்கு அப்புறம் ‌நெக்ஸ்ட் ஷெட்யூல் போனா போதும்னு சொல்லி விட்டார்களாம்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க சில வாரங்கள் ஆகலாம் என நினைத்த டைரக்டர் வெங்கட்பிரபு உள்ளிட்ட யூத் யூனிட், அடுத்தகட்ட பணிகளை செய்து வந்தனர். அதாகப்பட்டது... இதுவரை படமாக்கிய காட்சிகளுக்கு தேவையான எடிட்டிங், எக்ஸ்ட்ரா பிட்டிங் பணி‌களை செய்து வந்தார். எத்தனை நாட்களுக்குத்தான் அதையே பார்த்துக் கொண்டிருப்பது, என நினைத்த அந்த குழு, மீண்டும் தயாரிப்பாளரை அணுகி நெக்ஸ்ட் ஷெட்யூல் பற்றி கேட்க, முதலில் சொன்ன பதில்தான் மீண்டும் வந்திருக்கிறது. மங்காத்தாவுக்கு தயாரிப்பாளர் போட்ட ரெட் சிக்னல் தொடர்வதால், க்ரீன் சிக்னல் கிடைக்கும் வரை ஓய்வெடுக்கிறேன் எனக் கூறி நாயகன் அஜித் தனது மகளுடன் விளையாடி பொழுதுபோக்கி வருகிறாராம்.
மகிழ்ச்சியில் இருக்கிறார் நயன்தாரா. காரணம், அவர் நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘சிம்ஹா’ (தெலுங்கு), ‘பாடிகார்ட்’ (மலையாளம்), ‘சூப்பர்’ (கன்னடம்) ஆகிய படங்கள் ஹிட்டானதுதான். தென்னிந்திய மொழிகளில் நடித்த 4 படங்களும் ஒரே வருடத்தில் ஹிட்டாகியிருப்பது வேறெந்த ஹீரோயினுக்கும் நடந்திராத விஷயமாம். இப்போது தெலுங்கில், ‘ராமராஜ்யம்’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அடுத்து வெங்கடேஷ் படம்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு மீண்டும் ஆஸ்கார் விருது

2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக 2 ஆஸ்கார் விருதுகளைப் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு மீண்டும் ஆஸ்கார் விருது பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான '127 ஹவர்ஸ்' படத்தில் இசையமைத்தார் ஏ.ஆர்.ரகுமான், அதில் இடம்பெறும் 'If i Rise' என்ற பாடலுக்காக இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெற வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் 41 பாடல்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமானின் '127 ஹவர்ஸ்' பாடலும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 41 பாடவ்களிலிருந்து 6 பாடல் பரிந்துரை செய்யப்படும். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும அந்த 6 பாடல்கள் வருகிற ஜனவரி மாதம் 6ந் தேதி அறிவிக்கப்படும். இதை பொறுத்தே ரகுமானுக்கு இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை கிடைக்குமா என்பது தெரிய வரும். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த ஆண்டுக்கான 'கோல்டன் கோளப்' விருது அதே பாடலுக்குக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.

Thursday, December 16, 2010

"அரசியல் எனக்கு தெரியாது'






விஜயசாந்தியின் நடிப்பில் உருவான "வைஜெயந்தி ஐ.பி.எஸ்'. "பவானி' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விஜயசாந்தி நடித்த

தமிழ் கற்கிறார் ஸ்வாதி?





"சுப்பிரமணியபுரம்' படத்தில் நடித்த ஸ்வாதி, "கனிமொழி' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். ""சுப்பிரமணியபுரம்' படத்தைத் தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் தமிழில் நான் எதிர்பாக்கும் நல்ல கதைகள் வரவில்லை. இப்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறேன். தமிழில் விக்ரம் ஜோடியாக நடிக்க பேச்சு நடக்கிறது. கதை நன்றாக இருப்பதால் நடிக்கும் முடிவை எடுத்துள்ளேன். தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளேன். தமிழ் படங்களிலும் விரைவில் டப்பிங் பேசி விடுவேன். இதற்காக தமிழ் கற்று வருகிறேன். தமிழில் என்னை "சுப்பிரமணியபுரம்' ஸ்வாதி என்றழைக்கிறார்கள். தெலுங்கில் "கலர்ஸ்' ஸ்வாதி என்கிறார்கள். ஸ்வாதி என அழைத்தாலே மகிழ்வேன்'' என்றார்.

கார்த்தி எனது நண்பர்: தமன்னா பளீச்

நான் யாரையும் காதலிக்கவில்லை, தன்னுடன் நடிக்கும் சக ஹீரோக்களை, என்னுடைய நண்பர்களாகத் தான் பார்க்கிறேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் தமன்னா தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தனுஷ் உடன் வேங்கை உள்ளிட்ட படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்தி-தமன்னா நடித்த பையா படம் சூப்பர் ஹி்ட்டானது. இப்படம் வந்த தருணத்தில் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. அந்த செய்தி இப்போதும் தொடர்கிறது. ஆனால் இச்செய்தியை இருவரும் மறுத்தனர்.

இதனிடை‌யே தமன்னா அளித்துள்ள பேட்டியில், நான் ஏற்கனவே இதுபற்றி நிறைய கருத்துக்கள் சொல்லிவிட்டேன். ஆனாலும் இதுபோன்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கும், கார்த்திக்கும் இடையே காதல் எதுவும் கிடையாது. அவர் ஒரு சிறந்த மனிதர் மற்றும் சகநடிகர். எனக்கும், அவருக்கும் இடையே இருப்பது நல்ல நட்பு மட்டுமே. இந்த நட்பு பையா படத்திற்கு முன்பு இருந்தே தொடர்கிறது. அது இனிமேலும் தொடரும் என்றார். என்னைப்பொறுத்த வரை சிறுத்தை படத்தில் கார்த்தியுடன் நடிக்கும் சகநடிகை அவ்வளவுதான் மற்றபடி வேறு ஒன்றுமில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் அடுத்த படத்தின் டைரக்டரும் அவரே

"விருதகிரி" படத்தை தொடர்ந்து தம்முடைய அடுத்த படத்தையும், விஜயகாந்தே டைரக்ட் செய்யவுள்ளார்.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில், விஜயகாந்த்தின் மச்சான் எல்‌.கே.சுதீஸ் தயாரிப்பில், கேப்டன் முதன்முதலாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் "விருதகிரி". இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. முதல்படத்திலேயே தமது முத்திரையை பதித்த கேப்டன் ஏக குஷியில் இருக்கிறார். இதனைத்தொடர்ந்து, தம்முடைய அடுத்த படத்தையும், அவரே டைரக்ட் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமது கட்சியினருடன் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள கேப்டன், விரைவில் தமது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். இந்தபடமும் அவரது முந்தைய படங்களை போன்று ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் படமாக இருக்கும். 

திண்டாடும் விஜய்யின் காவலன்

சமீபகாலமாக விஜய் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். குறிப்பாக, விஜய் நடித்து வெளிவந்த "சுறா" படம் சரியாக ஓடாததால், தியேட்டர் அதிபர்கள் விஜய்யிடம் நஷ்டஈடு கேட்டு போராடி வருகின்றனர். மேலும் அவருடைய படத்தை திரையிட விட‌மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் விஜய்‌யின் அடுத்தபடமான "காவலன்" படத்தை திரையிட தியேட்டர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

டைரக்டர் சித்திக்கின் இயக்கத்தில், விஜய்-அசின் நடித்த "காவலன்" படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. முதலில் இப்படம் இம்மாதம்(டிசம்பர்) வெளிவருவதாக இருந்தது. ஆனால் கமலின் "மன்மதன் அம்பு" படம் இம்மாதம் 23ம்‌தேதி ரிலீஸ் ஆவதால், "காவலன்" படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அதற்கும் பிரச்சனை வந்துவிட்டது. காரணம் ஏற்கனவே கலைஞரின் "இளைஞன்", கார்த்தியின் "சிறுத்தை", தனுஷ்-ன் "ஆடுகளம்" உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு புக்ஆகி விட்டதால் "காவலன்" படத்தை திரையிட, தியேட்டர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் காவலன் படம் எப்போது ரிலீஸ்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் அரசியலுக்கு வரமாட்டார் - எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார். அரசியல் மேடைகளிலும் ஏற மாட்டார், என்று விஜய்யி்ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம்,

Monday, December 13, 2010

மோஸ்ட் வான்டட்

"வாட் தி கிரேட்' என்ற புத்தகம்தான் இப்போது ஹாலிவுட் ரசிகர்களின் மோஸ்ட் வான்டட். ஹாலிவுட் பிரபலங்களின் உணவு பழக்க வழக்கங்கள்தான் புத்தகம் முழுவதும் நிரம்பியிருக்கிறதாம். மெலிந்த உடல் அழகுக்காக ஏஞ்சலீனா ஜோலி சாப்பிடுவது எதை தெரியுமா? கரப்பான் பூச்சியாம்.

இப்போதைய புதுவரவு சோனியாஅகர்வால்!

இப்போது எல்லாம் ஹோட்டல் பார்ட்டிகளில் தலைக் காட்டுவது இல்லை திரிஷா. அதற்கு பதில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரம்யா கிருஷ்ணனின் வீட்டில் சங்கமிக்கிறார்கள். இரவு முழுவதும் நடக்கும் பார்ட்டிகளில் இப்போதைய புதுவரவு சோனியா அகர்வால்.

நீதிமன்றத்தில் அனுஷ்கா!

போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட மனையை வாங்கியதன் மூலம் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறார் நடிகை அனுஷ்கா. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2,700 சதுர அடி கொண்ட

நயன்தாரா தற்கொலை செய்வார்!

நான் கைவிட்டுவிட்டால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார் என்று நடிகர் பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா - நயன்தாரா ஜோடி திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். பிரபுதேவாவுக்கு

நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு!

தமிழில் நயன்தாராவின் கடைசிப் படம் என்ற பெருமை அநேகமாக பாஸ் என்கிற பாஸ்கரனுக்குக்

ஏர்போர்ட் மகா மட்டமாக உள்ளது!

""மற்ற நகரங்களைவிட சென்னையை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  ஆனால், சென்னை ஏர்போர்ட் மகா மட்டமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த என் நண்பர்களும் சென்னை ஏர்போர்ட்டை பற்றி என்னிடம் குறை சொன்னார்கள். அது மட்டும் கொஞ்சம் மாறினால் நன்றாக இருக்கும்'' என்று கருத்துத் தெரிவித்திருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

நடிப்பிற்கு முழுக்கு போடுகிறார் சுந்தர்.சி

சுந்தர்.சி-யின் சமீபத்திய படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, மீண்டும் டைரக்டர் பணியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

உள்ளத்தை அளித்தா, அன்பேசிவம், வின்னர், கிரி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. கமல், அர்ஜூன், மாதவன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் இயக்கிய சுந்தர்.சி, தலைநகரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். தலைநகரம் படத்தின் வெற்றி அவரை நடிப்பில் கவனம் செலுத்த வைத்தது. அதனைத்தொடர்ந்து வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், வாடா, குருசிஷ்யன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஒருசில படங்கள் வெற்றி பெற்றன. ஆனால சமீபத்திய இவரது படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, மீண்டும் டைரக்ஷன் பணியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி குஷ்புவும் ஓ.கே.சொல்லியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

வனிதா மகன் கோர்ட்டில் ஆஜர்

நடிகை வனிதா - நடிகர் ஆகாஷ் மகன் விஜய் ஸ்ரீஹரி, நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டான். ரகசிய விசாரணை கோரியதை தொடர்ந்து,

மன்னிக்கவும்.....





கடந்த சில நாட்களாக பல பிரச்சினைகளில் இருந்ததால் பதிவுகளை போட முடியவில்லை.  இன்றுமுதல் நமது தளம் வழக்கம்போல் செயல்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன். 

Wednesday, December 8, 2010

கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை-டாப்ஸி

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
'லிப் டூ லிப், பிகினி போன்றவை சினிமாவில் சாதாரணமாகிவிட்டது. சமீபத்தில் வெளியான படங்களில் அதிக முத்த காட்சிகள் இடம்பெறுகின்றன. அந்த வரிசையில் நடிகை டாப்ஸியும் இதற்கு ஆதரவாக பேசியுள்ளார். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லைÕ என்கிறார் டாப்ஸி.

விமானம் வாங்க ஸ்ருதி கமல்ஹாசனுக்கு ஆசை!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
அடிக்கடி வெளியூர்களுக்கு பறப்பதால் சொந்தமாக விமானம் வாங்க ஸ்ருதி கமல்ஹாசனுக்கு ஆசையாம். 


எனது திருமணம் 2012&ல் நடக்கும்-கரீனா கபூர்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
சைஃப் அலி கானுடனான எனது திருமணம் 2012&ல் நடக்கும் என்றார் கரீனா கபூர். ஷாகித் கபூரை காதலித்து வந்தார் கரீனா கபூர். இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இருவரும் பிரிந்தனர். பின்னர் சைஃப் அலிகானை காதலித்து வருகிறார் கரீனா கபூர். திருமணம் பற்றி அவர் கூறியதாவது: திருமணம் பற்றி சைஃப் மற்றும் எனது குடும்பத்தாரிடம் பேசி வருகிறேன். சைஃப் தனது தயாரிப்பு நிறுவனம் மற்றும் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கிறார். நானும் பிசியாக இருக்கிறேன். அதனால் 2012&ல் எங்கள் திருமணம் இருக்கும். மீண்டும் ஷாகித்துடன் நடிப்பீர்களா என்று கேட்கிறீகள். அது பற்றி எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. ஷாகித் சிறந்த நடிகர். நல்ல கதையோடு வந்தால் அவருடன் நடிப்பது பற்றி பரிசீலிப்பேன். இவ்வாறு கரீனா கபூர் கூறினார். 

தமிழில் ரீமேக் தான் 'வானம்'.

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிம்பு படம் என்றாலே ஹீரோயின் பற்றி தான் பேச்சு வரும். சிம்பு தற்போது நடித்து வரும் 'வானம்' படம் அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘வேடம்’ திரைப்படத்தினையே தமிழில் ரீமேக் தான் 'வானம்'. éவானம்é படத்தில் சிம்புவிடன், பரத் அனுஷ்கா, சினேகா உல்லால், வேகா, சோனியா அகர்வால் நடிக்கின்றனர். இன்னொரு நடிகையும் ஒரு பாடலுக்கு ஆட உள்ளார். யார் அந்த நடிகை என்று கேட்டதற்கு, அது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு.

அடுத்த படத்திலும் ரஜினி சார் வாழ்த்தணும்





"மைனா' வெற்றிக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் படம், விக்ரம், ஆர்யாவுக்கு ஜோடி என பெரிய படங்களின் நாயகியாக பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறார் அமலாபால்.

"மைனா' தந்து போன அனுபவம்?

அப்துல்கலாமை கவர்ந்த குண்டு கல்யாணத்தின் குங்குமப் பொட்டு!

Gundu kalyanam`s bindi impresses Abdul kalam
தனது குண்டு உடம்பால் ரசிகர்களை கவர்ந்து காமெடியில் கலக்கிய நடிகர் குண்டுகல்யாணம் டைரக்டர் அவதாரம் எடுத்து நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற படத்தை இயக்கி வருவது தெரிந்ததே. குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் குழந்தைகளை கவரும் காட்சிகளோடு,

நல்ல படங்களை தயாரிப்பேன்! - சொல்கிறார் குணாநிதி

Murattu kaalai producer Gunanidhi interview
முதல்வர் கருணாநிதியின் உறவினர் அமிர்தத்தின் வாரிசு குணாநிதி அமிர்தம் தயாரித்திருக்கும் புதிய படம் முரட்டுக்காளை. சுந்தர் சி - சினேகா நாயகன் - நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில்

தமிழில் நல்ல படங்களே வருவதில்லை - ப்ரியாமணி

Actress Priyamani interview about Tamil cinema chanceஇப்போதெல்லாம் தமிழில் நல்ல படங்களே வருவதில்லை ; அதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்று நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் தமிழ் சினிமா‌வில் வாய்ப்பில்லாமல் வலம் வந்து கொண்டிருந்தவருக்கு அமீர் மூலம் லக் அடித்தது. பருத்திவீரன் படத்தின் முத்தழகுவாக நடித்த ப்ரியாமணியின் நடிப்பை பார்த்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் அம்மணிக்கு தூது விட்டனர். ஆனால் அம்மணியோ... நல்ல கதை இருந்தால்தான் நடிப்பேன் என்று கூறி ஒரு சில குப்பை படங்களில் கமிட் ஆகி மண்ணை கவ்வினார். அதேநேரம் தமிழில் காட்டாத கவர்ச்சியையெல்லாம் தெலுங்கு ரசிகர்களுக்கு காட்டியதாலோ என்னவோ... அங்கு ஹிட் நாயகியானார் ப்ரியாமணி.
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பட வேட்டைகளில் ஈடுபட்டு வரும் அம்மணி, தமிழ் படங்களில் நடிக்காததற்கு சொல்லியிருக்கும் காரணம், ஆர்யா விவகாரம் அளவுக்கு இன்னமும் ‌பூதாகரமாக வெடிக்காவிட்டாலும் ; அப்படியொரு சூழ்நிலை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதெல்லாம் தமிழில் நல்ல படங்களே வருவதில்லை ; அதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்று ப்ரியாமணி சொன்னது இன்னமும் வி.சி.குகநாதன் போன்ற தமிழ் மற்றும் தமிழ் சினிமா ஆர்வலர்களின் காதில் விழவில்லை போலும்!. 

ஆர்யா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி : குகநாதன் அறிக்கை


VC Guganathan comes to Arya`s rescueதமிழ் சினிமாவையும், தமிழ் ரசிகர்களையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யாவுக்கு பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் கண்டனம் தெரிவித்த விவகாரம் திரையுலகில் பெரும் புயலாக கிளம்பியது. குகநாதனுக்கு

எதையும் தேடிப் போறதில்லை : பிரபுதேவா பேட்டி

Actor Prabhu deva interview















நான் எதையும் தேடிப் போறதில்லை ; வருவதை விருப்பமா செய்வேன் என்று நடன கலைஞர், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்திருக்கும் பிரபுதேவா கூறினார். ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தின்

ரஜினிகாந்துக்கு அறுபதாம் கல்யாணம்!


     ரஜினிகாந்துக்கும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் வருகிற 10 ஆம் தேதி (வெள்ளிகிழமை) நடைபெறுகிறது.  வருகிற 12 ஆம் தேதி ரஜினிக்கு 60 வயது முடிவடைந்து 61 ஆவது வயது பிறக்கிறது.
     இதன்படி அறுபதாம் கல்யாணம் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவர்களின் வீட்டில் நடக்கிறது.  அன்று காலை 10  ௦ மணிக்கு நிகழ்சிகள் தொடங்குகிறது.  புரோகிதர்கள் மந்திரம் ஊத, மங்கள வாத்தியங்கள் முழங்க அறுபதாம் கல்யாணம் நடக்கிறது.  இந்த விழாவில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

Tuesday, December 7, 2010

கமல்ஹாசன் வலையில் சிக்கிய த்ரிஷா அம்மா!

Trisha''''s mom in Manmathan Ambu
உலக நாயகன் கமல்ஹாசன் வீசிய வலையில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சிக்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடிகைகளின் அம்மாக்களில் அழகானவர் யார்? என ஒரு ‌போட்டி வைத்தாலும், கேள்வி கேட்டாலும் முதலிடத்தில் இருப்பவர் த்ரிஷாவின் அம்மா உமாவாகத்தான் இருப்பார். த்ரிஷாவைப் போலவே இன்னமும் இளமையான தோற்றத்துடன் மாடர்ன் மங்கையாக வலம் வந்து கொண்டிருக்கும் உமாவை சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயன்று தோற்றுப் போயிருக்கிறார்கள். நடிப்பெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று சட்டென பதில் சொல்லி கால்ஷீட் கேட்பவர்களை ஓ‌ட்டம் பிடிக்க வைத்து விடுவார்.

ஆனால் இப்போது கமல்ஹாசன் வீசிய வலையில் விழுந்து விட்டாராம் உமா. கமல்ஹாசன் - த்ரிஷா நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில்தான் உமா நடிக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 90 சதவீதம் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டிருக்கும் கமல்ஹாசன், த்ரிஷாவுக்கு பாதுகாப்பாக வரும் உமாவுக்காக ஒரு சிறிய கேரக்டரை உருவாக்கியிருக்கும் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், அந்த கேரக்டரில் கண்டிப்பாக நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். கமல்ஹாசனும் விரும்பி கேட்டுக் கொண்டதால் உமா சம்மதம் தெரிவித்து விட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.(dinamalar)

அம்பு நாங்கள்; டார்கெட் ரசிகர்கள்: சொல்கிறார் கமல்

மன்மதன் அம்பு படத்தின் ஆடியோவை அயல்நாட்டில் வெளியிட்டு விட்டு தமிழகம் திரும்பிய கமல், கே.எஸ்.ரவிக்குமார். உதயநிதி ஸ்டாலின், உயிர் சங்கீதா, தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட மொத்த யூனிட்டும் இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிகை மற்றும் மீடியாக்காரர்களை சந்தித்து படம் பற்றி பேசியது. அதில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி கேட்டதும் ஏதோ வெளியூர் திருமணத்தில் கலந்து கொள்ள த்ரிஷா சென்றிருப்பதாக கூறினார்கள். (நிஜம் தானா..?)
சரி படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லுங்கள் என கமலிடம் கேட்டபோது, கமல் கதையை பற்றியோ, கதாபாத்திரங்களைப்பற்றியோ மூச்சு விடவில்லை. சரி அம்பு எது? அம்பு எய்யப்படும் டார்கெட் எது.. என ஒரு நிரூபர் கேள்வி கேட்டதும் உற்சாகமடைந்த கமல், மன்மதன் அம்பு படத்தில் அம்பு நாங்கள் எல்லோரும், டார்க்கெட் நீங்களும், ரசிகர்களும்தான் என பதில் அளித்தார். அப்போ த்ரிஷாவுக்கு என்ன வேலை? என்று ஒரு நிரூபர் அப்பாவியாய் முணுமுணுத்தது கமலின் காதில் விழாத காமெடி!
kamal meets medias

Monday, December 6, 2010

காவலன் சூட்டிங்கில் திக் திக்! அசின் ஓப்பன் டாக்!!

Kavalan shooting over
 










காவலன் சூட்டிங்கை முடித்துக் கொண்டு மும்பை புறப்பட்டுச் சென்றார் நடிகை அசின். இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதுடன், அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்ததான் நடிகை அசி‌னுக்கு எதிராக பொதுநல ஆர்வலர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்திருக்கும் காவலன் பட சூட்டிங் நடக்கும் இடங்களுக்குச் சென்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். தமிழகத்தில்

நடிகர் கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்



 மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:  மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும்,

எம்.ஜி.ஆர்., பாணியில் விஜய்

vijay gives free rice bag to poor people in his kavalan movie trailer











கடந்த வாரம் பொள்ளாச்சி, உடு‌மலைப்பேட்டை பகுதியில் வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்த விஜய் 100 ஏழைகளுக்கு 100 கறவை பசுக்களையும், கன்றுகளையும் இலவசமாக வழங்கினார். அதேபோல்

மன்மதன் அம்பு படத்திற்கு வெளிநாட்டு உரிமை 3 கோடி

Manmadhan Ambu movie overseas rights sold










Saturday, December 4, 2010

அவமானப்பட்டும் அவமானப்படுத்தும் ஆர்யா

Humiliating Arya disgraced

ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும் சிங்கம்புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சினிமா வி.ஐ.பி.கள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஜீவாவின் நண்பர் எனும் முறையில் கலந்து கொண்டனர் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள்.

Friday, December 3, 2010

தமிழ் திரைப்படத்தில் நடிக்கிறார் எடியூரப்பா

Yeddyurappa Acts in Tamil Cinema

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழில் தயாரிக்கப்பட உள்ள பக்தி திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக எடியூரப்பாதலைமையிலான பா.ஜ., அரசு, பல்வேறு அரசியல் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.  ஆனால்,

வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது?

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பாலிவுட் முன்னாள் ஹீரோயின் மாதுரி தீக்ஷித், திருமணத்துக்குப் பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இதையடுத்து

என் வளர்ச்சிக்குக் காரணம் தமிழ்த் திரையுலகம்தான் - ஆர்யா

Tamil cinema world is the main reason for my growth

என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கும். என்னை ஆளாக்கி ஆதரித்துக் ‌கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது நன்றி கலந்த அன்பு வணக்கங்கள்.
எந்த பிரச்னைகளுக்குள்ளும் போகாமல் நடிப்புத் தொழிலில் மட்டுமே முழுமையாக மனதை ஈடுபடுத்திக் ‌கொண்டிருக்கும் என்னைப் பற்றி

இரவு நடனம்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
புத்தாண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு சினிமா உலகினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு வந்த பெரிய வாய்ப்பு ஒன்றை மறுத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.  மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு தினத்தில் இரவு நடனம் ஆட வேண்டும். கால்ஷீட் தந்தால் ரூ.3 கோடி தரத் தயார் என பிரியங்கா சோப்ராவுக்கு வாய்ப்பு கதவை தட்டியது. ஆனால் அதை அவர் நிராகரித்தார். "தொகை பெரிதுதான். ஆனால் சமீப காலமாக வெளிநாடு, படப்பிடிப்பு என்று குடும்பத்தை பிரிந்திருக்கிறேன். புத்தாண்டு தினத்திலாவது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை. அன்று குடும்பத்துடன் வெளிநாடு செல்லவும் திட்டமுள்ளது" என்கிறார் பிரியங்கா சோப்ரா.(dinakaran)

Wednesday, December 1, 2010

அப்பனாவது ; ஆத்தாளாவது... வனிதா விஜயகுமார் ஆவேசம்!

Vanitha vijayakumar interview
நானும், என் கணவரும் அசிங்கப்பட்டதற்கு பின் விஜயகுமாரை நான் சும்மா விடமாட்டேன். இரண்டு நாள் என் புருஷனை சிறையில் தள்ளிவிட்டனர். இந்த விஷயத்தில்

வனிதா புகார்: அருண் விஜய் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

FIR filed against actor arun vijay











நடிகை வனிதா, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரை அடுத்து, நடிகர் அருண் விஜய் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா. இவர்,