Wednesday, April 20, 2011

டூ பீஸ் உடையணிந்து நடிக்கிறார் அசின்!

நடிகை அசின் அடுத்து நடிக்கப்போகும் இந்திப்படம் ஒன்றில் டூ பீஸ் உடை அணிந்து நடிக்கவுள்ளார். கண்களை உறுத்தும் வகையிலான கவர்ச்சி உடைக்கு நான் எதிரி; அது மாதிரி நடிக்க வேண்டிய அவசியம் இருந்தால் அந்த படத்தில் இருந்தே விலகி விடுவேன், என்று பேசி வந்த அசின், இப்போது தன கட்டுப்பாட்டை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார். தமிழ் சினிமாவில் வேண்டுமானால் அவரது கட்டுப்பாடு கட்டுக்கோப்போடு இருக்கலாம்; பாலிவுட்டுக்குப் போனால் எடுபடுமா என்ன? இந்தியில் முதல் படம் ஹிட் என்பதால்,

லிப் டூ லிப்: அசின் மறுப்பு

ரெடி படத்தின் மூலம் சல்மானுடன் மீண்டும் ஜோடி போட்டு இருக்கும் அசின், அப்படத்தில் சல்மானுடன் லிப் டூ லிப் முத்தக் காட்சியில் நடித்ததாக செய்திகள் வந்துள்ளது. ஆனால் இதனை அசின் மறுத்துள்ளார்.

கஜினி படத்தின் மூலம் இந்திக்கு போனவர் அசின். அப்படத்தின் வெற்றியால் லண்டன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் சல்மானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்படம் ஃப்ளாப் ஆனது. இப்போது ரெடி படத்தின் மூலம் மீண்டும் சல்மானுடன் ஜோடி சேர்ந்து நடித்து இரக்கிறார். இப்படத்தின் சூட்டிங்

நயன்தாராவால் சொத்துக்களை இழந்தார் பிரபுதேவா!


நடிகை நயன்தாராவை காதலித்து வரும் பிரபுதேவா, அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது சொத்துக்களை மாஜி காதல் மனைவி ரமலத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளார். பிரபுதேவா - நயன்தாரா இடையேயான கள்ளக்காதல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு ‌

Saturday, April 16, 2011

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

பெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். 


ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் வித்தியாசப்படும். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசமும்தான்.

மகிழ்ச்சியான தருணத்தில் தலைகோதும் விரலும், சோக தருணத்தில் தலை சாய மடியும் தரும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சி அடைகிறாள்.

எதிர்பார்க்கும் தருணத்தில் ஏங்கச்செய்து, எதிர்பாராமல் முத்தமிடும் துணையிடம் பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் ஆணை விட சில நேரங்களில், வாக்குவாதம் செய்து கோபப்படும் காதலனை கண்டு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

ஊடல் நேர்ந்து பிரிந்த பின் சில நிமிடங்கள் கழித்து காதலன் போன் செய்யும் போது, பெண் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தான் விரும்பும் ஒரு விஷயத்தை செய்து தன்னை சந்தோஷப்படுத்தும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

தான் விரும்பாத ஒரு காரியத்தை காதலன் செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக வந்து ஸாரி கேட்கும் அந்தத் தருணம் பெண்களின் மகிழ்ச்சியில் ஒரு கர்வமும் கூடவே தெரியும்.

மிக முக்கியமாக... காதலனின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. அதனை நுகரும் போதும் பெண்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

காதலில் வெற்றி பெற வழிமுறைகள்

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி  தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக எவ்வாறு காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் :


- நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினைவூட்டும் விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும்.

- நாம் காதலிக்கிறோம் என்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோமா ? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை கன்பார்ம் செய்யும் நடவடிக்கையில் இறங்கவேண்டியதுதான்.

- நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.

- நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னிப்பாக கவனித்து பதில் கொடுத்தால் நிச்சயம் அவர் உங்களுடையவர்தான்.

- சாதாரணமாக பேசும் பொழுது நீங்கள் அணிய உள்ள உடையின் நிறம் பற்றி நண்பர்களுடன் பேசுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த கலரை நீங்கள் அணிய உள்ளதாக கூறினால் நீங்கள் விரும்பும் நபரும் அதே கலர் உடையில்தான் வருவார் என்பது நிச்சசயம்.

- உங்களுக்குப் பிடித்த பாடலை முணுமுணுங்கள். உடனே அது உங்களவரின் ரிங்டோனாகவோ, காலர் டியூனாகவோ மாறிவிடும்.

- பிடித்த பொருட்களை கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காததாகிவிடும்.

- எந்த ஒரு விஷேச தினமென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை அதிகமாக்கும்.

- எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள். காதல் தருணங்களில் உண்மைதான் அன்பின் ஆழத்தை அதிகப்படுத்தும்.

- நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. நம் காதலிக்கும் நபரிடம் இருந்து முத்தமோ, அடியோ எதுவென்றாலும் வாங்குவது நாமாகத்தான் இருக்க வேண்டும்.

- ஆல் தி பெஸ்ட். தைரியமாக காதலை வெளிப்படுத்துங்கள் வெற்றி பெறுங்கள்.