Thursday, July 26, 2012

தொடாமல் நான் மலர்ந்தேன்!

தொட்டால்தான் காதல் மலரும் என்பதில்லை தொடாமலேயே காதலை வரவழைக்கலாமாம். படுக்கை அறையில் மனைவிக்கு மூடு வரவழைக்க சின்னச்சின்ன விளையாட்டுக்களை பரிந்துரைக்கிறார்கள் காதல் நிபுணர்கள். படித்துப் பாருங்களேன்.
உங்கள் மனைவியிடம், மிக நெருக்கமாக அருகாமையில் அமர்ந்து தொடாமல் கண்களினால் ஊடுருவுங்கள். அதுவே உங்கள் மனைவியிடம் சின்ன சிலிர்ப்பை ஏற்படுத்தும். கிறக்கமான ஒரு பார்வை. கிசுகிசுப்பான பேச்சு என காதலை தொடங்குங்கள். இதைப் பார்த்து நம்மை தொடமாட்டானா என்ற ஏக்கத்தை அவருக்குள் வரவழைக்கும்.
படுக்கை அறையில் பால் இருந்தால் ரொம்ப நல்லது. இல்லாவிட்டால் சாக்லேட், கேக் என எதையாவது படுக்கை அறையில் வைத்திருங்கள். உங்களின் வாயில் சாக்லேட் வைத்துக்கொண்டு அதை மனைவியின் அங்கத்தில் வைத்து மெதுவாய் விளையாடுங்கள். பின்னர்
அதே சாக்லேட்டை மெதுவாய் அவருக்கு ஊட்டிவிடுங்கள் அப்புறம் பாருங்கள் சும்மா கிறங்கிப்போவார். கேக் இருந்தால் கிரீமை அங்கங்கே பூசி விடுங்கள். உங்களின் நாவினால் ருசிபார்க்க கிளர்ச்சி தலைக்கு ஏறும்.
உணர்ச்சிகள் குவிந்திருக்கும் இடம் கூந்தல். தொடவேண்டாம், ஆழமாய் முகர்ந்து பார்த்தாலே போதும் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுவிடுவார்களாம். அதைவிட காதுமடலின் மீது லேசாய் ஊதினால் போதும் அந்த காற்றின் மூலமே உணர்ச்சியை தூண்டிவிட முடியுமாம்.
கைகளால் தீண்டுவதை விட கனிகளால் இதழ்களை தீண்டலாம். திராட்சைப் பழத்தை கொத்தாக வைத்துக்கொண்டு அதனை பெண்ணின் இதழ்களில் உரசுங்கள். பின்னர் நீங்கள் அதை சாப்பிட இருவருக்குமே உணர்ச்சிகள் அதிகரிக்கும்.
பெண்ணின் மென்மையான உடலை மயிலிறகாலோ அல்லது பறவையின் இறகினாலே வருடுவது கூடுதல் இன்பத்தை தருமாம். ஆடையில்லாத மேனியில் பட்டுப்போன்ற பறவையின் இறகு செய்யும் ஜாலங்கள் சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
பெண்ணிற்கு மட்டுமல்ல இந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். பெண்களை மலரச்செய்யும் இதுபோன்ற தொடாமல் விளையாடும் விளையாட்டுக்களை விளையாடிப் பாருங்களேன், சேதாரம் இல்லாத செய்கூலி கிடைக்கும்.(thatstamil)

No comments:

Post a Comment